politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

 

கோவிட் தொற்றுக்கு முன்பே பொருளாதாரம் கவலைக்கிடமாக இருந்தது என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  பகல் வெளிச்சத்தை போல மிகத் தெளிவான இந்த உண்மையை நாம் திரும்ப திரும்ப கூறிவருகிறோம். பண மதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி.யும் பொருளாதரத்தை சிதைத்தது மட்டு மல்ல; மக்களின் வாங்கும் சக்தி யையும் அழித்துவிட்டது. திட்டமிடப் படாத நீண்ட ஊரடங்கு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் சங்கிலித் தொடரை முற்றிலும் குலைத்துவிட்டது. இந்திய பொருளா தாரம் செங்குத்தான வீழ்ச்சியில் உள்ளது.

*************

மக்களுக்கு வாங்கும் சக்தியை மோடி அளித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக கூட்டுக் களவாணி முதலாளித்துவம் கொழுக்கவும் தேசிய வளங்களை கொள்ளை அடிப்பதற்கும் அன்னிய மூலதனம் நமது வளங்களை கைப்பற்றவும் வழிவகை உரு வாக்கப்படுகிறது. மக்களின் பசியை யும் பட்டினியையும் பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள் சொத்துக்களை சுருட்ட அனுமதிக்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறது. என்னே மோடியின் மகிமை!

*************

வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள அனை வருக்கும் மாதம் ரூ. 7500 உடனே தருக!  பசியால் வாடும் அனைவருக் கும் இலவச உணவு தருக!  இது தான் “ஆத்மநிர்பார்” அதாவது சுய சார்பு என்பதற்கு உண்மையான பொருள்.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

 

 

 

;