tamilnadu

சிஐடியு மாநாடு... 1ம்பக்கத் தொடர்ச்சி

பிரதிநிகள் மாநாடு
பிற்பகல் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வேலை அறிக்கையையும், பொருளாளர் மாலதி சிட்டிபாபு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை மீது விவாதம் தொடங்கியது.சனிக்கிழமை வரை பிரதிநிதிகள் விவாதம் நடைபெறும். ஞாயிறன்று மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொகுப்புரை வழங்குகிறார்.

பேரணி - பொதுக்கூட்டம்
சிஐடியு மாநில மாநாட்டின் நிறைவு நாளான செப். 22ஆம் தேதி மாலை சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மாநாட்டுப் பேரணியும் காந்திரோடு தேரடியில்அகில இந்திய மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

;