tamilnadu

img

உற்ற தோழனை இழந்துவிட்டேன்... டி.கே.ரங்கராஜன் உருக்கம்

தோழர் கே.வரதராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விடுத்துள்ள செய்தி: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கொடி இயக்கத்தில் இணைந்து பயணித்த அன்புத் தோழன் கே.வி. அவர்களது மறைவு அதிர்ச்சியையும், பெருந்துயரையும் ஏற்படுத்துகிறது. துவக்க காலத்தில் திருச்சியில் அவரோடு இணைந்து நின்ற போராட்டக் களங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. 1970களில் அரசுப் பணியை துறந்துவிட்டு திருச்சியில் முழு நேர ஊழியராக பணியாற்றிய கே.வி.  சிறந்த அமைப்பாளர். பன்முகத் திறமைகள் கொண்டவர். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்திலும்,பின்னர் மாநிலத்திலும் கட்சியை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கிராமப்புற இயக்கத்தை வலுப்படுத்துவதில் அவர், குறிப்பிடத்தக்க பணியாற்றினார். ஊழியர்களை கண்டறிந்து அவர்களை இயக்கத்தின் தலைவர்களாக மாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. 

கட்சியின் வட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை உயர்ந்த அவர், எல்லோருடனும் எளிமையாகவும் கலகலப்பாகவும் பழகக் கூடிய பண்பு நிறைந்தவர்.ஒரு கம்யூனிஸ்டுக்கே உரிய ஒழுக்கமும், ஜனநாயகப் பண்புகளும் நிரம்பியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

;