tamilnadu

எம்ஜிஆர் வாரிசு எனக் கூறி அவதூறு பரப்பியவர் கைது

சென்னை:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வின் வாரிசு என கூறி, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பியவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்துள்ளனர்.பாஸ்கர் என்ற பெயரில் தொடர்ச்சியாக இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவர் வெளியிட்ட சுமார் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றும் இணைத்தில் வைரல் ஆகியது.அவதூறு வீடியோக்களை வெளியிட்டு நீதித்துறை குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறி, உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரவிஜெய பால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். எழும்பூர் மத்தியகுற்றப்பிரிவு அலுவல கத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

;