tamilnadu

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கோரிக்கைவிடுத்திருந்தார். மேலும் தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. 


;