tamilnadu

img

தேன்கூட்டில் கல் வீசாதீர்கள் : மு.க.ஸ்டாலின்

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல்வீசுவது போன்றது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இருமொழிக்கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி மும்மொழி திட்டத்தை கொண்டுவர நினைக்கக்கூடாது. மும்மொழித் திட்டத்தைமீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது. தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக வீர வணக்கம் செலுத்திவருவதை பாஜக அரசு மறந்துவிட்டதோ? 

தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்படத்தை யார் செலுத்த  முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது. அன்னைத்தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழுவரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படைநோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை.

மீண்டுமொரு மொழிப்போராட்டத்திற்கு பாஜக அரசு வழி அமைத்து விடாது எனஇன்னும் நம்புகிறேன். மும்மொழித் திட்டத்திற்குமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே கடும்எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.  இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையைமத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பேராசைக்கனவும், அதற்காக பிழையான காரியமும் பேரிடரை ஏற்படுத்தி விடும்.மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்படத்தை யார்வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.க கடுமையாக எதிர்த்துப் போர்தொடுக்கும்.  இதுகுறித்து கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;