tamilnadu

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை,மே 6-வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் கூறப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையில் 8 செ.மீட்டரும், வேலூரில் 5 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேணு கொண்டபுரத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;