tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. 17 ஆம் கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறைநடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின்17-ஆம் கட்ட விசாரணை வெள்ளியன்று நிறைவடைந்தது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை  மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 16 கட்ட விசாரணையில் மொத்தம் 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், 17-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.இதில் ஆஜராக மொத்தம் 38 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 22 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் ஒருநபர் ஆணையம் வெள்ளியன்று விசாரணையை நடத்தியது. இதையடுத்து 17-ஆம் கட்டவிசாரணை நிறைவடைந்தது. அடுத்ததாக, 18-ஆம் கட்ட விசாரணை ஜனவரியில் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

;