facebook-round

img

இதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி

வட்டிக்கு வட்டி கடன் பிரச்சினையில் இப்போது இறங்கி வந்துள்ள அரசு இப்போதும் 

விவசாய கடனுக்கு மனம் இரங்கவில்லை.

விவசாயக் கடனுக்கு இது பொருந்தாது என்ற மத்திய அரசின் நிலைபாடு ஏற்கத்தக்கதல்ல. விவசாயிகள் பெற்ற கடனுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்.

மேலும் நுண் நிதி நிறுவனங்கள் விவசாயம், கல்வி, சிறு தொழில் ஆகியவற்றில் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெற்ற சிறு கடனாளிகளுக்கு வட்டியும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான பலனாக இருக்கும்.

அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப நிவாரணம் இந்த பொருளாதாரத்தை மறுசுழற்சி செய்து மீட்டெடுப்பதற்கும் உதவும்.

காலம் கடந்து யோசிப்பதற்கு பதில் காது கொடுத்துக் கேட்பீர்களா?

#FarmersLoan

#maduraiMPdemands

-Su Venkatesan MP

 

;