science

img

பி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் : கவுண்டவுன் தொடங்கியது

பி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுனை இஸ்ரோ இன்று தொடங்கியது.

51ஆவது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 26 மணி நேரக் கவுண்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன், வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு செயற்கைக்கோள், லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும். 

அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் கொண்ட சின்தடிக் அபர்சர் ரேடார் இணைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

;