tamilnadu

img

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டி வெளியீடு

சென்னை:
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், தேர்வு நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-ஆசிரியர்கள், மாணவர்கள் என 46.37 லட்சம் பேருக்கு மறுசுழற்சி முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட தேவையில்லை, அந்த மாணவர்கள் நேரடியாகத் தேர்வு எழுதலாம். ஆனால், அவர்களைத் தனி அறையில் அமர வைக்க வேண்டும்.விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்காக அனைத்து வகை விடுதிகளையும் ஜூன் 11ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்வை கண் காணிக்கும் பணியில் 2.26 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணியில் 62 ஆயிரத்து 107 பேர் ஈடுபடுவார்கள்.இவ்வாறு தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

;