tamilnadu

img

நவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 31- திருப்பூரில் அனைத்துத் தொழில்களி லும் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் போனஸ் வழங்க வலியு றுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பனியன், விசைத்தறி, மோட்டார், ஹோட்டல் உள்பட அனைத்துப் பிரிவு தொழில்களிலும் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு நியாயமான போனஸ் தொகை கணக்கிட்டு நவ. 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு சார்பில் வெள்ளியன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், விசைத்தறித் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் உள் ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;