tamilnadu

img

ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு...  ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு பணிகள் நிறுத்தம்...

ஸ்ரீஹரிகோட்டா
இஸ்ரோவின் கீழ் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் என்ற பெயரில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் முக்கிய செயற்கை கோள்கள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும்.  

இந்த மையத்தின் பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இருவரும் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருந்த  சுவர்ணமுகி நகர் பகுதி தனிமைப்படுத்தும் பகுதியாக மாறியுள்ளது. மேலும்  தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததால் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் மின்சாரம், தீயணைப்பு, குடிநீர் தவிர மற்ற அனைத்து பணிகள் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் ஆலை பகுதியில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 

;