tamilnadu

img

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு 1.60 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை:
பொறியியல் பட்ட படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித் துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது.பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் வாரத்திலேயே ஏராளமான மாணவர்கள்  விண்ணப்பித்தனர். இறுதியாக நிலவரப்படி, 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப் பப்பதிவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் இதுவரை 90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20 ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாளாகும்.

;