tamilnadu

img

பட்டினப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி... 

சென்னை 
தமிழகத்தின் தலைநகர் மண்டலமான சென்னை கொரோனாவால் இயல்பு நிலையை இழந்துள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சம் கொள்கின்றனர். 

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் மணிமாறனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். ஏற்கெனவே மாம்பல சரக காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;