tamilnadu

img

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் காலமானார்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் மறைவை மனம் ஏற்கமறுக்கிறது என கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். “தோழர் கே.தங்கவேல் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பனியன் தொழிலாளியாக வேலையில் சேர்ந்து, சக தொழிலாளிகளைத் திரட்டி சங்கம் அமைத்தவர். கட்சியின் முழுநேர ஊழியராகி, ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகள், மாநில செயற்குழு உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அதிர்ந்து பேசமாட்டார். ஆழமான சிந்தனையாளர்,தோழர்களை அரவணைத்து செயல்பட வைத்த சிறந்த அமைப்பாளர். அவரை பிரிந்துவாடும் அவரது துணைவியார் சாந்தி மற்றும் மகள்கள் கவிதா, பிரியாவுக்குஆறுதல்கள்” என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

;