tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு...  5,850 பேர் குணமடைந்தனர்...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிமுள்ள நகரங்களில் வேகமாக பரவிய கொரோனா தற்போது கிராமங்களிலும் தனது சீரிய ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 121 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை (6,007) தாண்டியுள்ளது. இன்று (ஆக.18) ஒரே நாளில் 5,850 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,787 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று  - 1,182 பேருக்கு பாதிப்பு. 

;