tamilnadu

img

சென்னை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை
நாட்டின் புதிய கொரோனா மையமாக உள்ள தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரேனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

;