சென்னை
தமிழகத்தின் தலைநகர் பகுதியான சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் ஒருநாளில் பாதிக்கும் விகிதத்தில் சென்னை 90% உள்ளது. இதனால் சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சாந்த பகுதியில் கொரோனா வேகமாகிய பரவி வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 768 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.