tamilnadu

img

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை திருத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை:
உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்க சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்தி சனிக் கிழமையன்று (செப்.26) மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், கூடுதல் சுமைகளை ஏற்க வேண்டியுள்ளதால், அதனை ஈடு செய்ய அரசாங் கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஐ.நா. கன்வென்ஷன் விதியை உருவாக்கியது. அதனை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால், மத்திய மாநில அரசுகள் அதனை சட்டமாக மதிக்க வேண்டும்.மத்திய அரசு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை 2013ம் ஆண்டு இயற்றியது. உணவு உரிமையை உறுதி செய்ய, மாற்றுத் திறனாளிகளை தானாக உள்ளடக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தினோம். அதனை மத்திய அரசு ஏற்கவில்லை.இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், மாற்றுத்திறனாளிகளையும் உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனை நிறைவேற்றாவிடில் நீதிமன்றம் உத்தரவிடும் என எச்சரித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை செப். 29ல் மீண்டும் நடைபெற உள்ளது.இந்நிலையில், மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவை மட்டும் பிறப்பித்துள்ளது. இதனை மாற்றுத்திறனாளிகள் ஏற்கவில்லை. நீதிமன்ற அறிவுரைப் படி உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.மத்திய அரசு, இந்திய விவசாயத்தை நிர்மூலமாக்கும் விதத்தில் மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச் சட்டங்கள் பன்னாட்டு, உள் நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயத்தைத் தாரைவார்க்கும் விதத்தில் உள்ளன. இதனால் ரேஷன் திட்டத்தை நிர்மூலமாக்குகிற, உணவு உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மறைமுக ஏற்பாடு உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை முடக்கவும் வாய்ப் புள்ளது. எனவே, இந்த சட்டங் களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன், மாநில செயலாளர் பா.ராதாகிருஷ்ணன், மாநில துணை செயலாளர் கே.பி. பாபு, உள்ளிட்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.திருவொற்றியூரில் கி. ராதை தலைமையிலும், வியாசர்பாடியில் நடராஜன் தலைமையிலும் போராட்டங்கள் நடைபெற்றன. தருமபுரியில் மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, எம்.மாரிமுத்து உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூரில் மாநில து.தலைவர் பாரதி அண்ணா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் 100க் கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 2300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7500 மாற்றுத்திறனாளிகள் இன்று நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;