tamilnadu

img

சிபிஐ அலுவலகத்தை களங்கப்படுத்தியதற்கு திமுக, திக கண்டனம்

சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது.களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக் கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை கொச்சைப்படுத்தி வெளியிட்டவர் களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22 ஆம் தேதி  நடத்தவிருக்கும்   ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகமும் பங்கேற்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

;