tamilnadu

img

சிவப்பு நிறத்துக்கும் ரெட் அலர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை

சென்னை:

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுவாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் எனப்படும் மழை எச்சரிக்கை கொடுக்கப்படுவ தில்லை. நிர்வாகத் துறை தேவைகளுக்காக ஏதேனும் ஒரு பகுதியில் கன மழை பெய்யும் என்றால் அதனை தனித்துக் காட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது.


ஒவ்வொரு அளவு மழைக்கும் ஒவ்வொரு நிறம் பயன்படுத்தப்படுவது போல சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.இந்த சிவப்பு நிறத்துக்கும் ரெட் அலர்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை ஊடகங்கள் ரெட் அலர்ட் என பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

;