tamilnadu

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு : சிபிஎம் இரங்கல்

சென்னை,ஜூலை 9-  மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூத்த பத்திரிகையாளர் திரு. எம்.பி.திருஞானம் அவர்கள்  உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து வேதனை யடைந்தேன். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தராசு’ புலனாய்வு வார இதழில் முதன் முதலில் தனது  எழுத்துப் பணியைத் துவங்கிய அவர் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் அறியப்பட்டவர். பத்திரிகை யாளர் நலன்களுக்காகவும் பாடுபட்டவர். ஐ.என்.டி.யு.சி சார்பில் வெளிவரும் இதழில் ஆசிரியராக பணியாற்றி தொழி லாளர்களின் நலனுக்காக பாடுபட்டவர். தனது எழுத்துப் பணி மூலம் அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் முத்திரைப் பதித்தவர். அவரது மறைவு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;