tamilnadu

img

திருப்பூர் விவசாயி தற்கொலைக்கு காரணமான ஆக்சிஸ் வங்கி கடன் வசூல் ரவுடி கும்பலை கைது செய்க...

சென்னை:
மிரட்டல் மற்றும் அவமரியாதையான பேச்சால் திருப்பூர் மாவட்டம், மானூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி தற்கொலைக்கு காரணமான  ஆக்சிஸ் வங்கியின்கடன் வசூலிக்கும் ரவுடி கும்பலை கைது செய்யவேண்டும். விவசாயி குடும்பத்திற்கு தமிழகஅரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55)
என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ்வங்கியில் விவசாயத்திற்கென்று 2012 ஆம்ஆண்டு கடன் பெற்றுள்ளார். முறையாக பணத்தைச் செலுத்தியதால் 2017 ஆம் ஆண்டுமீண்டும் ரூ. 1.5 லட்சம் அதே வங்கியில் கடன்
வாங்கியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், வங்கியின் சார்பில் கடன்வசூலிக்கும் ரவுடி கும்பல் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்றுதவணையை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியதுடன் அவமரியாதையாக பேசியுள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் மருந்து குடித்து விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன்தவணையை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்த பிறகும் வங்கி அதிகாரிகள் அரசு உத்தரவை மீறி கடனை கட்ட வற்புறுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. வங்கிக்கடன் வசூலுக்கு தனியார் முகவர்களை பயன்படுத்துவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதே தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. கடன் வாங்கிய விவசாயிகளை, மாணவர்களை அவமானப்படுத்துவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கையில் இந்த குண்டர்படை ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வங்கிக்கடன் தவணை வசூலிப்பதற்கு தனியார் முகவர்களை பயன் படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

ராஜாமணி அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்துகைது செய்வதுடன், அவர் வங்கியில் பெற் றுள்ள மொத்த கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;