tamilnadu

img

விஜயகாந்த் உடல்நிலை: முதல்வர் நலம் விசாரிப்பு...

சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். விஜயகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்” எனத் தெரிவித்தி
ருக்கிறார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விஜயகாந்த் முழுமையான உடல்நலம் பெற்று தொடர்ந்து பொதுப்பணியாற்ற விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

;