tamilnadu

img

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து 

திருச்சி 
திருச்சி மாவட்டத்தின் காந்தி மார்கெட்டில் பல்பொருள் அங்காடி போல காய்கனிகள், பழங்கள், பலசரக்குகள், பிளாஸ்டிக், ஜவுளி அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான சந்தையாக உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக காந்தி மார்கெட் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திங்களன்று மார்க்கெட்டிலிருந்து தீப்பிழம்புகளுடன் கரும்புகை வந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் போராடி நெருப்பு பரவலைத் தடுத்தனர். எனினும் மார்கெட்டிலிருந்த 8 கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
 

;