tamilnadu

img

கூட்டுறவு கடனை திருப்பிச் செலுத்த கால நீட்டிப்பு கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் கடன் வசூலை ஓராண்டுகாலத்திற்கு கால நீட்டிப்பு வழங்கவேண்டும், மாநகராட்சியில் மக்களைவதைக்கும் சீரழிந்த அனைத்துசாலைகளையும்  போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று வாத்தியார்விளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, செல்வக்கனி தலைமை வகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர செயலாளர் மோகன், வட்டார குழு உறுப்பினர்கள் மனோகர் ஜஸ்டஸ், அஸீஸ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். இதில், சாந்தி, ராணி, அனுஷாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

;