tamilnadu

img

எஸ்எப்ஐ மாணவிகள் மாநாடு எழுச்சிப் பேரணியுடன் தொடங்கியது

புதுக்கோட்டை:
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலமாணவிகள் மாநாடு எழுச்சிப் பேரணியுடன் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் தொடங்கியது.இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலமாணவிகள் மாநாடு மார்ச்.7, 8 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. மாநாடு சனிக்கிழமையன்று பேரணியுடன் தொடங்கியது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய எழுச்சிப் பேரணியை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தீப்சிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தப்பாட்ட மேளங்களுடன் மாணவிகளின் விண் அதிரும் முழக்கங்களுடன் நடைபெற்று பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பாபூங்கா வந்தடைந்தது.

சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் தீப்சிதா, மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன், தலைவர்ஏ.டி.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மத்தியக்குழு உறுப்பினர்கள் எம்.சத்யா, ஆர்.ஜான்சி, மாநில செயற்குழுஉறுப்பினர் எஸ்.காவியா, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா ஆகியோர் பேசினர்.முன்னதாக மாணவிகள் உபகுழு கண்வீனர் ரெ.கார்த்திகாதேவி வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வைஷ்ணவி நன்றி கூறினார். பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பங்கேற்றனர்.

;