மதுரை:
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியை அடுத்த எம்.செங்குளத்தில் வியாழனன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் ஐந்து பெண்கள் பலியாகினர். ஆமத்தூர் வெங்கேடஸ்வரபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (35), காடநேரிதெற்குதெருவைச் சேர்ந்த லெட்சுமி, காடநேரி வடக்குத்தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகள் மகாலெட்சுமி ஆகியோர் தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 7 பேராக அதிகரித்துள்ளது.