tamilnadu

img

சாத்தான்குளம் கொலை வழக்கு... காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடதுகை செயலிழப்பு...  

மதுரை 
நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. கொலை நடந்த காவல்நிலையம், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை, சக காவலர்களிடம் விசாரணை அறிக்கை ஆகிய அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடதுகை திடீரென செயலிழந்துள்ளது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஸ்ரீதர் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அதில் அவரது முதுகுத்தண்டு சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக தற்போது அவரது இடதுகை செயலிழந்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

;