tamilnadu

img

போராட்டக் களத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்...

ஊரடங்கால் மிகக் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதார பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் ஒருமாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்களை அடுத்த 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;