court

img

EVM குறித்த புகார்: உடனடியாக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு முறை வாக்களித்தால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் பதிவாகியதாக எழுந்த புகாரை உடனடியாக விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது, ஒரு முறை வாக்களித்தால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் பதிவாகியதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. இந்த நிலையில், EVM-இல் பதிவான வாக்குகளை VVPAT ஒப்புகை சீட்டுடன் சரிபார்ப்பதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் விசாரணையின்போது,  இது தொடர்பாக குற்றச்சட்டை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தார். இதை அடுத்து, இந்த புகாரை உடனடியாக விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

;