districts

வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்திவைப்பு

நாமக்கல், ஏப். 18- தேர்தல் நடைமுறை மற்றும் பணிகள் கார ணமாக நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறி ஞர்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வழக்க றிஞர்கள் கூறுகையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் 2020,  ஜூலை 18 இல் துவக்கப்பட்டது. அப்போது  முதல்,  வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு  அறை,  உணவு உண்ண அறை, ஆண் வழக்க றிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட  அனுமதி தரவில்லை. பொது மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை கள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தர வில்லை.    இதனை கண்டித்து ஏப். 15 முதல் காலவ ரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப் பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகி றோம்.  இந்நிலையில்  குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆலோ சனை கூட்டம் தலைவர் சரவணராஜன் தலை மையில் நடைபெற்றது. இதில் சார்பு நீதி மன்றம் அமைய முன்னெடுப்பு பணிகள்  எதுவும் துவங்கப்படவில்லை என்பதாலும், அடிப்படை வசதிகள் பலமுறை கேட்டும் செய்து தராததாலும், நீதிமன்ற தொடர் புறக்க ணிப்பு செய்வது எனவும், வியாழனன்று நீதி மன்ற வளாகம் முன்பு, மாவட்ட நீதிபதியை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நடைமுறை அம லில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதி இல்லை என போலீசார் தெரிவித்துள் ளார். இதன்காரணமாக வியாழனன்று நடக்க விருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர்.

;