கோவை லங்கா கார்னர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்டது. மேலும் 3 நபர்களை மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர். காயம் அடைந்த பொது மக்களை உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையிடம் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் டாஸ்மார்க் கடை அகற்றப்படும் என்று காவல்துறையினர் கூறிய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.