districts

சென்னை முக்கிய செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  ஆணையமே உணவு வழங்குக தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னை, ஏப். 18 - வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியே உணவு வழங்க  உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா  சாகுவிடம், சங்கத்தின் செயலாளர் ஹரிசங்கர் அளித்துள்ள  மனுவில், “ஏப்.19 அன்று நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச் சாவடியை விட்டு வெளியில் செல்ல இயலாது. தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஊர்க்காவல்  படையினருக்கு உரிய முறையில் உணவு ஏற்பாடு செய்து  தரப்படுகிறது. அதேபோன்று வாக்குச்சாவடி அலுவலர் களுக்கும் காலை, மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான ஆணைகளை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.

பொறியியல் மாணவர்களுக்கான  ஸ்காலர்ஷிப் விருதுக்கு விண்ணப்பம்

சென்னை, ஏப்.18-  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஈடி) மதிப்புமிக்க இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் எட்டாவது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வர வேற்கிறது. முழு பரிசுத் தொகை ரூ 10 லட்சமாகும். இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியி யல் மாணவர்களிடையே காணப்படும் தனிச் சிறப்பையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் வெகுமதி அளித்து கொண்டாடுவதே ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது திட்டத்தின் நோக்க மாகும். இதற்கு முந்தைய வெற்றியாளர்கள் கூகிள், ஆப்பிள், போயிங், டெலாய்ட் மற்றும் எம்.ஐ.டி போன்ற தொழில்துறை நிறு வனங்களில் இணைந்துள்ளனர். 2024 பதிப்பிற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. மேலும் தக வலுக்கு- https://bit.ly/3TSwZYf பார்வை யிடவும்.

தேன்கனிக்கோட்டையில்  சிபிஎம் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி, ஏப்.18- கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத்தை ஆதரித்து தேன்கனிக் கோட்டை வட்டத்தில் சிபிஎம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. கெலமங்கலம், தளி ஒன்றியங்களில் சாபரானபள்ளி, புதுக்கோட்டை அத்திக்கோட்டை,தெளுசூர்,குருபட்டி சந்தனப்பள்ளி,கிரி எனப் பள்ளி ஹால்அல்லி,மணியம்பாடி சம்பந்த கோட்டை ,ஒசள்ளி,திப்பசந்தரம் ஜார்க்கலிட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டைபேருந்து நிலையத்தில் நிறைவுற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் மைய கிளை செயலாளர் நடராஜ்,கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தூர்வாசன் பாலாஜி, முனிகிருஷ்ணன், மாரப்பா ரமேஷ் கலந்து கொண்டனர்.

 

 

;