தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் திங்களன்று (மே 6) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநில அலுவலகமான எம்.ஆர்.அப்பன் இல்லத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு கொடியேற்றினார். வடசென்னை மாவட்ட தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங், வடசென்னை மாவட்ட செயலாளர் ம.அந்தோணிசாமி உள்ளிட்டோர் பேசினர்.