districts

img

23 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி சாதனை

புதுக்கோட்டை, மே 6 - தொடர்ந்து 23 ஆண்டுகளாக புதுக் கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சத வீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள் ளனர். மாணவர்கள் 33, மாணவிகள் 30  என மொத்தம் தேர்வு எழுதிய 63 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். தர்ஷனா, ரிஷிகாஹரிணி, ஆனந்த நாயகி, ஹரிணிபிரியா, பசுமதி ஆகி யோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். ஆனந்தநாயகி, நர்மதா, ஜெயஸ்ரீ, அரு ணாச்சலம் ஆகியோர் கணினி அறிவி யல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றுள்ளனர். தர்ஷினி கணினிப் பயன்பாடு பாடத்தில் நூற் றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.  கே.கே.தர்ஷனா பொருளியல் பாடத் தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற் றுள்ளார். ரிஷிகாஹரிணி வணிகவி யல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இயக்குநர் சுதர் சன், துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி இனிப்பு கள் வழங்கினர்.

;