districts

img

ஆட்டோ தொழிலாளி மறைவுக்கு சிஐடியு அஞ்சலி

திருவாரூர், மே 6 - திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரம் மரக் கடை ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநராக செயல் பட்டு வந்த தோழர் என்‌.மனோ கர் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமா னார். அன்னாரின் மறைவு செய்து அறிந்த திருவாரூர் ஆட்டோ தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாள ரும், சிஐடியு மாவட்டத் தலை வருமான எம்.கே.என்.அனிபா, மாவட்டப் பொரு ளாளர் டி.வீரமணி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ராஜேந்திரன் மற்றும் கிளை உறுப்பினர்கள்  மறைந்த தோழர் மனோகரின் உட லுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்டோ தொழிலாளர் குடும்ப பாதுகாப்பு நிதியி லிருந்து ரூ.10,000 அவரது  குடும்பத்தாரிடம் வழங்கப் பட்டது.  தோழர் மனோகர், ஆட்டோ தொழிலாளர் சங்கத் தில் உறுப்பினராக இருந்து  செயல்பட்டவர். திங்கள் கிழமை மாலை அவரது  இறுதிநிகழ்ச்சி நடை பெற்றது.

;