districts

img

அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா

திருச்சிராப்பள்ளி,  மே 6 - தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் 41 ஆவது ஆண்டு  அமைப்பு நாள் திங்களன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத் தில் உள்ள 11 ஆவது வட்டக்  கிளைக்கு உட்பட்ட அலுவ லகங்களில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி 2 வட்டக் கிளை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மாவட் டத் தலைவர் முனைவர் கா. பால்பாண்டி சங்க கொடியை யும், அகில இந்திய மாநில  அரசு ஊழியர் சம்மேள னத்தின் கொடியை மாவட்டச்  செயலாளர் பாபு, நெடுஞ் சாலை துறை சாலை பணி யாளர்கள் சங்க கொடியை தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோரும் ஏற்றி வைத்த னர். மாவட்ட மைய அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை முன்னாள் மாநில துணைத் தலைவர் பி.வி.சந்திரசேகர், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளன கொடியை முன்னாள் மாவட்ட தலைவர்  எம்.சீராஜீதின் ஏற்றிவைத்த னர்.  மாவட்ட மையத்தில் அமைப்பு தினம், கருத்த ரங்கம் மாவட்ட தலைவர் முனைவர் கா.பால் பாண்டி  தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் பாபு வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந் தம், மாவட்ட பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் மாநில துணைத் தலைவர் பி.வி.சந்திரசேகர், அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சிரா ஜீதின், மாநில துணைத் தலை வர் எம்.வி.செந்தமிழ் செல்வன் ஆகியோர் கருத்து ரையாற்றினர். செந்தில் குமார் நன்றி கூறினார்.  மேலும் திருச்சி 1, திருச்சி 2, மணப்பாறை, முசிறி,  தொட்டியம் மற்றும் துறை யூர் பகுதிகளிலும் கொடி ஏற்றி அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

;