districts

img

திருச்சிற்றம்பலத்தில் குடிநீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, நெசவாளர் அணி சார்பில், கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை தலைமை வகித்து திறந்து வைத்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

;