districts

img

பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை

கரூர், மே 6 - கரூர் மாவட்டம் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழு தினர். தேர்வின் முடிவுகள் திங்கள் கிழமை காலை வெளியானது.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் கரூர்  பரணி பார்க் பள்ளி மாணவி ஹரிணி  சரோஜா 596 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை  படைத்துள்ளார்.  மேலும் 15 மாணவர்கள் 580-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 59 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றுள்ளனர். எஸ்.கவின் விகாஸ் - 591,  டி.ஹரிணி – 590 மதிப் பெண் பெற்றுள்ளனர். 580 மதிப்பெண் களுக்கு மேல் 15  மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 23  மாணவர்களும், 550 மதிப்பெண் களுக்கு மேல் 56 மாணவர்களும், 500  மதிப்பெண்களுக்கு மேல் 162 மாண வர்களும் பெற்றுள்ளனர்.  கணிதத்தில் 7 மாணவர்களும், இயற்பியலில் 4 மாணவர்களும், கணினி  அறிவியலில் 16 மாணவர்களும், வேதி யியலில் 1 மாணவரும், கணக்குப் பதி வியியலில் 7 மாணவர்களும்,  வணிகக்  கணிதத்ததில் 5 மாணவர்களும், வணிக வியலில் 13 மாணவர்களும், பொருளி யலில் 3  மாணவர்களும், கணினி பயன் பாட்டியலில் 3 மாணவர்களும் என மொத்தம் 59 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.  விழா விற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், பரணிபார்க்  கல்விக் குழுமத்தின் முதன்மை  முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணி யன், பள்ளியின் முதல்வர் கே.சேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

;