districts

img

வீரத் தியாகி லீலாவதிக்கு வீரவணக்கம்

திருவாரூர், ஏப்.23 - தியாகி லீலாவதி 27 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி, திருவாரூர்  மாவட்டம் முழுவதும் தியாகி லீலாவதி படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் தியாகி லீலாவதி படத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.கோமதி மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, லீலாவதியின் வீரமிக்க  களப் போராட்டத்தை விளக்கி பேசினார்.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.கலைமணி, கே.ஜி.ரகு ராமன் மற்றும் மாதர்,வாலிபர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி நகரத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். பவானி அஞ்சலி செலுத்தினார். நீடா மங்கலத்தில் அமைப்பின் மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி, தோழர் லீலா வதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் குடவாசல், வலங்கை மான், நன்னிலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீரவணக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

;