கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பகுதி கழக பொறுப்பாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் வெண்மணி, சிற்றரசு, சந்திரசேகர், இளைஞரணி புவனேஷ் சந்திரசேகரன், முரளி கிருஷ்ணன், நாகராஜசோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.