headlines

img

இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

கர்நாடகத்தை மட்டுமல்ல, தேசத்தையே உலுக்கியிருக்கிறது பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் பயங்கரங்கள். கர்நாடகாவில் பாஜக வோடு ஒட்டிக் கொண்டு நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி யின் தலைவர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் சுரண்ட லுக்கும் உள்ளாக்கியிருக்கிறார். இது தொடர் பாக இதுவரை 2976 வீடியோ கிளிப்புகள் வெளி யாகியுள்ளன. 

தன்னிடம் உதவி  கேட்டு வரும் பெண்கள் அனைவரையும் பாலியல் சுரண்டலுக்கு உள் ளாக்கிய அவர், அனைத்தையும் தனது செல்போ னில் படம் பிடித்துள்ளது மட்டுமல்ல; அனைத் தையும் தனது பென்டிரைவில் சேமித்தும் வைத் துள்ளார் என்பது இந்திய நாடு இதுவரை கண்டி ராத மிகப்பெரிய பாலியல் மோசடி குற்றமாகும்.

இந்தப் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந் துள்ள நிலையில், ஒட்டுமொத்த கர்நாடகமும் கொந்தளித்துப் போயுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட அனைத்து மக ளிர் இயக்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள் ளன. நாடே கண்டிக்கும் இந்தப் பிரச்சனையில், கூட்டணி கட்சியான பாஜகவின் தலைவர்கள், இன்னும் குறிப்பாக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி உள்ளிட்ட அக்கட்சியின் பெண் தலை வர்கள் வாய்மூடி மவுனம் காக்கிறார்கள். அது மட்டுமல்ல, உப்புச்சப்பில்லாத பிரச்சனைக் கெல்லாம் அறிக்கை விடுகிற தேசிய பெண்கள் ஆணையம், 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக் கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய பிரச்சனையில் கள்ள மவுனம் காத்து வருகிறது. 

பிரஜ்வால் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா, மேற்கண்ட வீடியோ கிளிப்புகள் 4-5 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும், அது இப்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும் வெட் கக்கேடான முறையில் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். தனது கேடுகெட்ட மகன் பல ஆண்டுகளுக்கு முன்பே மிகக் கொடூர மான முறையில் பெண்களை பாலியல் வன் குற்றங்களுக்கு உள்ளாக்குகிற கயவன் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை ஹாசன் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்ததும், இப்போதும் அத்தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியிருப்பதும் எத்தனை பெரிய கயமைத்தனம்! எத்தனை பெரிய அதி கார அட்டூழியம்!

பிரஜ்வால் மட்டுமல்ல, அவரது தந்தை ரேவண்ணாவும், எச்.டி.குமாரசாமியும், தேவகவு டாவும் அவர்களுடன், பிரஜ்வாலை பாதுகாக்க  துணை போகும் ஒட்டுமொத்த பாஜகவும் கடும் கண்டனத்திற்குரியவர்கள். இரக்கமின்றி தண்டிக் கப்பட வேண்டியவர்கள்.

;