india

img

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணிநீக்கம்!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் 25 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
டாடா குழுமத்துடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைக்கப்பட்ட பிறகு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர்கள் சமமாக நடத்தப்படவில்லை என்றும், வேலை விதிமுறைகளில் காணப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் ஊழியர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் 25 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. 
இந்த நிலையில், கேபின் ஊழியர்கள் இல்லாததால், ஏர் இந்திய நிறுவனம் 75 விமான சேவைகள் ரத்து செய்துள்ளது.
 

;