புதுதில்லி/சென்னை, மே 2 - உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டிய உன்னத நாளான மே தினம் புதனன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது.
இதனொரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகமான தில்லியிலுள்ள தோழர் ஏ.கே. கோபாலன் பவனில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், செங்கொடியை ஏற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, பிருந்தா காரத் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு அலுவலகமான சென்னை தியாகராயர் நகரிலுள்ள தோழர் பி. ராம மூர்த்தி நினைவகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை யாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ஏ.பெருமாள், ஐ. ஆறுமுக நயி னார், ஆர். பத்ரி, க.சுவாமிநாதன், வெ. ராஜசேகரன், ஜி. செல்வா, எஸ். நம்புராஜன், இரா. சிந்தன், ரா. சுதிர் மற்றும் கட்சியின் மத்தியச் சென்னை, தென்சென்னை பகுதி தோழர்கள் பங்கேற்றனர்.