tamilnadu

img

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுத் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் மறுகூட்டலுக்கு மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
 

;