சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில், செங்கொடியை ஏற்றி வைத்த மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், தண்ணீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார். மாநில உதவி பொதுச்செயலாளர் வி. குமார், உதவித் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் எச். வசந்தி, வெங்கடேசன், எம்.வி.எஸ். மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.