tamilnadu

img

வரும் 18 ஆம் தேதி ஆந்திர கடற்கடையை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 18 ஆம் தேதி வலுப்பெற்று, ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைய தினம் அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 18 ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

;