tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண்காணிப்பின் கீழ் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த வழக்கானது, கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்க மனுவில் குறிப்பிட்டிருந்தது. 


இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிப்பது குறித்து ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் விடுத்துள்ளது.


;